அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக கழிப்பிட வசதி செய்து கொடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை. !
கிருஷ்ணகிரி

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும், சூளகிரியில் வேப்பனஹள்ளி எம்எல்ஏ. கே. பி.முனுசாமியிடம் ஆசிரியர்கள் கோரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள உத்தனப்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 370 மாணவர்கள் 380 மாணவிகள் என மொத்தமாக 750 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய கழிப்பிட வசதி இல்லாததால் பள்ளி மாணவ மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே பி முனுசாமி அவர்களிடம் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய கழிப்பிட வசதி எம்எல்ஏ நிதியிலிருந்து கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினார்.
உடன் சூளகிரி மத்திய ஒன்றிய செயலாளர் SVS மாதேஷ் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ