புதுப்பட்டி திருக்கோவிலில் அமைந்துள்ள தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா

திண்டுக்கல்

சித்தையன் கோட்டை - மல்லையா கவுண்டன் புதுப்பட்டி திருக்கோவிலில் அமைந்துள்ள தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா ஸ்ரீ விஷ்ணு கோத்திர பங்காளிகள் தலைமையில் நடைபெற்றது. ‌                                                  ‌                                                   ‌

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லைய கவுண்டன் புதுப்பட்டியில் அமைந்துள்ள தெய்வங்களான ஸ்ரீ பாமா ருக்மணி, ஸ்ரீ கிருஷ்ணா பெருமாள், ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீ சித்தி ஆஞ்சநேயர், ஸ்ரீ நவகிரகம் மற்றும் ஸ்ரீ கருடாழ்வாருக்கு மஹா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.      ‌    

இந்நிகழ்விற்கு முன்னதாக கோவில்கள் மற்றும் கோபுரங்களின் புனரமைப்பு பணிகள் முடிவடைந்து வர்ணம் பூசும் பணியும் நிறைவுற்ற நிலையில் விழா கமிட்டியினர் சார்பாக மஹா கும்பாபிஷேகம்  நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதனை அடுத்து காசி ராமேஸ்வரம், தலைக்காவேரி, கொடுமுடி, குடகநாறு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாக சாலையில் வைத்து மூன்று கால பூஜைகள் நடைபெற்ற நிலையில் இன்று  காலை 5- மணிக்கு நான்காம் கால பூஜையான மகாகணபதி பூஜை, கலச பூஜை, விநாயகா நவகிரஹா, ருத்ரா மற்றும் சாந்தி ஹோம மஹா பூர்ணா துதியும்  நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து  வேங்கட ஜோதி பட்டாச்சியர் தலைமையில் மந்திரங்கள் முழங்க கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கும், விழாவில்கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு     புனித தீர்த்தங்கள்  எந்திரங்கள் மூலம் தெளிக்கப்பட்டது. அதனையடுத்து கோவிலைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடங்கள் சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு பாலாபிஷேக தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.  

மேலும் விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் சித்தையன் கோட்டை பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, நகர செயலாளர் சக்திவேல், தொழிலதிபர் ஆர்.பி. ராமையா, சரவணன், முருகேசன் குடும்பத்தார், கவுன்சிலர்கள் லாவண்யா சுரேஷ்,  தியாகு, செல்வி கருப்பசாமி,வட இந்திய தொழிலதிபர்கள் உட்பட அனைவருக்கும் வேங்கட ஜோதி பட்டாச்சியர் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது.

மேலும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானங்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  ஸ்ரீவிஷ்ணு கோத்திர பங்காளிகள் செய்திருந்தனர்.


செய்தியாளர்

 அழகர் சாமி