தமிழக அரசின் பட்ஜெட்டை காணொளி காட்சி வாயிலாக காண்பதற்கு வலிவகை செய்த செய்தி மக்கள் தொடர்பு துறை.!
திண்டுக்கல்

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சியில் தமிழக அரசின் பட்ஜெட்டை காணொளி காட்சி வாயிலாக காண்பதற்கு வலிவகை செய்த செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களையும், சித்தையன் கோட்டை பேரூராட்சி செயல் அலுவலரையு பாராட்டிச்சென்ற பொதுமக்கள்
திண்டுக்கல்-மார்-14 தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் செய்தி மக்கள்தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விலக்க புகைப்பட கண்காட்சியை மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர்ந்து நடத்தப்படுகிறது.
இது தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது அதனை பொதுமக்கள் காணும் வகையில் தமிழக அனைத்து பேரூராட்சிகளிலும் , நகராட்சிகளிலும் பொதுமக்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு தலைமையில் கடைவீதி திடலில் பந்தல் அமைக்கப்பட்டு எல் இடி திரை வாயிலாக பொதுமக்கள் இடைக்கால பட்ஜெட்டை பொதுமக்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த காணொளி காட்சி வாயிலாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது...
எல்லார்க்கும் எல்லாம் என்ற முழக்கத்தோடு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் கூறி தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் உயர்கல்வித் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்," கனவுகளின் சிகரமாய் விளங்கிடும் அண்ணா பல்கலைக்கழகத்தினை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களின் தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள்ளும், உலக அளவிலான QS தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள்ளும் இடம்பெறச் செய்திட உரிய செயல்திட்டம் வகுக்கப்படும். மேலும் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை பொருத்தவரை நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. அந்த சாதனை அளவை மேலும் உயர்த்திடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு தரமான உயர் கல்வியினை தொடர்ந்து வழங்கிட இந்த அரசு பல முன் முயற்சிகளை எடுத்து வருகிறது. பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் திறன்மிகு வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், மின் பதிப்புகள் கொண்ட நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற உட்கட்டமைகள் 300 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்.
எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு பட்ஜெட் இது. இந்நிலையில் 2025-2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
சொன்னது போல பல முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. மேலும் எல்லார்க்கும் எல்லாம் என்ற முழக்கத்தோடு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதை பொதுமக்கள் அனைவரும் காணொளி காட்சி வாயிலாக கண்டுகளித்தனர்... இந்நிகழ்வில் உடன் சித்தையன் கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும் பொண்ணு முரளி, நகரச் செயலாளர் சக்திவேல், மாவட்ட நிர்வாகிகள் ரபிக் மைதீன், சௌந்தரபாண்டியன், சித்தையன் கோட்டை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் முகமது ரபிக், வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவினை ஏற்பாடு செய்த செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக அதிகாரிகளையும், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலுவையும் பாராட்டிச் சென்றனர்.
செய்தியாளர்
அழகர் சாமி