தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!
ராணிப்பேட்டை
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிலையத்தில் 2025 2026 பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 அகவிலைப்படியில் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.மாவட்டத் துணைத் தலைவர் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட செயலாளர் ஜெகதீசன், மற்றும் மாநில பொறுப்பாளர்கள் சுசீலா , மலர் ஆகியோர் கோரிக்கை விளக்க உரை மற்றும் சிறப்புரையாற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் மோகனா நன்றியுரை அளித்தார். இதில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
ஆர்ஜே.சுரேஷ்