தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பலி.!
ராணிப்பேட்டை

ஆற்காடு அருகே தேநீர் குடித்துவிட்டு சாலையை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பலி.!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் பகுதியை சேர்ந்த வேட்டைக்காரன் என்ற சமூகத்தை சார்ந்த முனுசாமி வயது (60) என்பவர் இன்று காலை 6 மணிகள் அப்பகுதியில் உள்ள தேநீர் கடையில் தேனீர் அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது ராணிப்பேட்டையில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த மிகவும் புகழ்பெற்ற தனியார் பாரதி பஸ் முதியவர் முனுசாமி மீது மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு நகர போலீசார் சாலையில் உயிரிழந்து கிடந்த முதியவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் விபத்தை ஏற்படுத்திய தனியார் பாரதி பஸ்ஸை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
செய்தியாளர்
அருள் அரசன்