அருப்புக்கோட்டையில் 10 வது வட்ட திமுகவினர் சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.!
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 10 வது வட்ட திமுகவினர் சார்பாக மாலை 6.32 மணிக்கு இஃப்தார் நிகழ்ச்சி அமைச்சர் K.K.S.S.Rஇராமசந்திரன் தலைமையில் நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் முன்பாக நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக K.K.S.S.T.சுப்பாராஜ் முன்னாள் சேர்மன் சிவப்பிரகாசம், தெழில் அதிபர் ஜனாப் J.சேக் பரீத் , நல்லூர் ஜமாத் தலைவர் ஜனாப் அ. சம்சுதீன், ஜமாத் செயலாளர் ஜனாப்.நை.சேக் உதுமான் மற்றும் வாழ வந்த புரம் ஜமாத் தலைவர்.காஜா நஜ்முதீன், செயலாளர்.சலீம் பாபு, மற்றும் கூட்டணி கட்சி இந்திய முஸ்லிம் லீக் பொறுப்பாளர் ச.முகம்மது சம்சுதீன், த.மு.மு.க மாவட்ட தலைவர் .த.மதார் கான் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், ஜமாத் பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள், அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் , மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் 10 வது வார்டு அப்துல் ரகுமான் 9 வது வார்டு அகமது யாசிர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விழாவினை T.M.மைதீன் பாட்ஷா அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
முகமது அன்சாரி