மாற்றுத்திறனாளி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.!

கடலூர்

மாற்றுத்திறனாளி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.!

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ குறவன் குப்பத்தில் உள்ள  நியூ லைட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா டிவைன் கிராஸ் மிஷன் மாற்றுத் திறனாளிகள் பள்ளி மற்றும் நியூ லைட் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆண்கள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

இதில் பள்ளியின் இயன்முறை மருத்துவர் சசி குமார்  அனைவரையும் வரவேற்றார்.


டிரஸ்டி ராஜாமணி முன்னிலை வகித்து பள்ளியின் மனநல நிபுணர் சகாய ராஜா தலைமை வகித்து நிகழ்ச்சியை நடத்தினர். 

நெய்வேலி மந்தார குப்பம் புனித சவேரியார் ஆலய பங்கு தந்தை அருட் திரு லூர்து சாமி  அடிகளார் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற கடும் பயிற்சியும் முயற்சியும் யேசு பாலன் அவர்களுக்கு ஆசி வழஙக வாழ்த்துக்கள் என வாழ்த்துரையும் வழங்கி போர்வைகள் , பட்டாசுகள் மற்றும் இனிப்புகளையும் வழங்கினார்..

விழாவில் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன சிறப்பாசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் பெற்றோர்கள்  மற்றும் ஊர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  

இறுதியில் விடுதி காப்பாளர் கென்னடி நன்றி கூறி விழா இனிதே நிறைவுற்றது.