மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் குடியரசு தின கொடியேற்று விழா.!

கடலூர்

மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் குடியரசு தின கொடியேற்று விழா.!

மாற்றுத்திறனாளி பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.!


கடலூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா
நெய்வேலியை அடுத்த ஏ  குறவன் குப்பத்தில் உள்ள  நியூ லைட் சாரிட்டபுல் டிரஸ்ட் சார்பில் குடியரசு தின விழா டிவைன் கிராஸ் மிஷன் மாற்றுத் திறனாளிகள் பள்ளி மற்றும் நியூலைட் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆண்கள் இல்லத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சகாய பாக்கியம் அனைவரையும் வரவேற்றார் .

பள்ளியின் மனநல நிபுணர் சகாய ராஜா தலைமை வகித்தார்.நியூ லைட் சாரிட்டபுல் டிரஸ்ட் டிரஸ்டி ராஜா மணி   சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியேற்றினார்.


மாற்றுத்திறனாளிகள் தினமும் கவனமுடன் தொழில்களை கற்றுத் தேர்ந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என வாழ்த்துரை கூறி இனிப்புகள் வழங்கினார்.

பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

சிறப்பாசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் ஊர பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இறுதியில் தசை பயிற்சியாளர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை காப்பாளர் கென்னடி செய்தார்.

இவ்விழா
இனிதே நிறைவடைந்தது.