திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.!

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.!

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இ.ஆ.ப தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 169 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 172 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், 97 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்யர் வழங்கினார்.


திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் (26.01.2025) காலை 08.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

பின்னர், மாவட்ட ஆட்சியர்  சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். இதில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர்  வந்திதாபாண்டே,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

முதலமைச்சர் காவலர் பதக்கம் 69 பேருக்கும், சிறப்பாக பணிரிந்த காவல்துறையினர் 100 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து விடுதலைப்போராட்ட தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, கொளரவித்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, நில அளவை மற்றும் பராமரிப்புத்துறை, கல்வித்துறை, மருத்துவக் கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மீன்வளம் மற்றும மீனவர் நலத்துறை, வனத்துறை, புள்ளியியல் துறை, போக்குவரத்துத்துறை, பால்வளத்துறை, உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை என மொத்தம் 207 அலுவலர்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


இவ்விழாவில், வேளாண்மைத்துறை சார்பில் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.9,227 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் 5 பயனாளிகளுக்கு ரூ.5.09 இலட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.1.39 இலட்சம் மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை 10 பயனாளிகளுக்கு ரூ.2.54 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பவர் வீடர் இயந்திரம் 6 பயனாளிகளுக்கு ரூ.6.60 இலட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறை (மத்திய கூட்டுறவு வங்கி) சார்பில் கடன் தொகை 3 பயனாளிகளுக்கு ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை சார்பில் தேய்ப்பு பெட்டி 2 பயனாளிகளுக்கு ரூ.13,100 மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித்துறை (மகளிர் திட்டம்) மானிய நிதி 10 பயனாளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வருவாய்த்துறை சார்பில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண நிதியுதவி 22 பயனாளிகளுக்கு ரூ.4.92 இலட்சம் மதிப்பீட்டிலும், முன்னாள் படைவீரர் நலன் பராமரிப்பு உதவித்தொகை 16 பயனாளிகளுக்கு ரூ.4.00 மதிப்பீட்டிலும், தாட்கோ துறை கடனுதவி 5 பயனாளிகளுக்கு ரூ.9.84 இலட்சம் மதிப்பீட்டிலும், மருத்துவத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் 2 பயனாளிகளுக்கு ரூ.13,380 மதிப்பீட்டிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் தென்னை நார் கயிறு தயாரித்தல் ஒரு பயனாளிக்கு ரூ.21.09 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 97 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா சிபிஎஸ்சி பள்ளி, திண்டுக்கல் புனித லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சீலப்பாடி வித்யாபார்த்தி மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி என 5 பள்ளிகளைச் சார்ந்த 267 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கண்கவர் கலைநிகழ்ச்சியை நடத்தினர். நிறைவாக கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு  மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து, மலர் துாவி மாரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில், பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார்,  மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(இணை இயக்குநர்) திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) முருகன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், மற்றும் வட்டாட்சியர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

செய்தியாளர்

அழகர் சாமி

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )