அரசு வேலை கிடைத்த கொஞ்ச நாளிலேயே கைது. "10,000 ரூபாய் லஞ்சம் வாங்கி" சிறையில் கம்பி எண்ணும் இளம் அதிகாரி.!

லஞ்சம் பெற்ற வழக்கில் கைது

அரசு வேலை கிடைத்த கொஞ்ச நாளிலேயே கைது. "10,000 ரூபாய் லஞ்சம் வாங்கி" சிறையில் கம்பி எண்ணும் இளம் அதிகாரி.!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடெர்மா மாவட்டத்தில் உதவிப் பதிவாளராகப் (Assistant Registrar) பணியாற்றிய மிதாலி சர்மா, தனது முதல் பணியிலேயே லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட சம்பவம் அரசுப் பணி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே, ஒரு குறிப்பிட்ட பணிக்காக 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது அவர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் (ACB) கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார்.

மிதாலி சர்மாவின் இந்த கைது நடவடிக்கையை விட, இன்றைய அரசு வேலைகளில் ஊழல் என்பது எவ்வளவு சாதாரணமாகிவிட்டது என்பதே சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நேர்மையுடன் பணியாற்ற வேண்டிய இளம் அதிகாரிகளே தங்களின் முதல் பணியிலேயே இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவது, நிர்வாக அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.