வேளாங்கண்ணி சென்று வந்த புதுமண தம்பதியினர் வந்த வாகனம் விபத்து. ! மணமகன் மரணம். !
திருச்சி

கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு காரில் திரும்பிய புதுமண தம்பதியினர் கார் விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே புது மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் இடுக்கி வரையாற்றுமண்டி எல்லக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் டொனாட். இவருக்கும் அமுல்யா என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே, புதுமண தம்பதிகள் காரில் வேளாங்கண்ணிக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளனர்.
வேளாங்கன்னி சென்றுவிட்டு, இன்று கேரளா திரும்பும்போது திருச்சி துவாக்குடி அருகே உள்ள அரை வட்ட சாலையில் எதிரே வந்த கண்டைனர் லாரியுடன் கார் மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில், , புதுமாப்பிள்ளை டொனாட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அமுல்யா (34)பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வீரைந்தனர்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார் மரணமடைந்த புது மாப்பிள்ளை, படுகாயமடைந்த அவரது மனைவி என இருவரையும் மீட்க போராடினர். ஆனாலும் மீட்க முடியாதததால் திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர் இருவரையும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அமல்யாவுக்கு முதல் கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து பற்றி துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.