திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை.!

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை.!

திருவண்ணாமலை கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு செய்தியாளர்களை சந்தித்தார் முன்னால் பாஜக தலைவர் அண்ணாமலை.

அப்போது தேசிய அளவில் உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "ஆடு, மாடோடு இருக்கிறேன். விவசாயம் பார்கிறேன்.

அண்ணாமலை

திருவண்ணாமலை கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு செய்தியாளர்களை சந்தித்தார் முன்னால் பாஜக தலைவர் அண்ணாமலை.

நேரம் கிடைத்தால் கோயிலுக்கு போகிறேன். தேவையில்லாத வேறு வேலையைப் பார்க்காமல் என்னுடையப் பணியை சந்தோஷமாக செய்கிறேன்.

புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.

இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். மத்திய இணை அமைச்சர் பதவி வரும் போது பெற்றுக் கொள்வேன். தற்போது, கூண்டுக் கிளியாக இருக்க விரும்ப வில்லை" என்று கூறியிருக்கிறார்.

மேலும் பாஜக, ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைக்கிறதா? என்ற கேள்விக்கு, "ஓ.பன்னீர் செல்வம் எங்கள் கூட்டணியில்தான் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும் போது ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேசுவார்" என்று பதிலளித்திருக்கிறார் அண்ணாமலை.