ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை.!
கிருஷ்ணகிரி
ஓசூர் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை. மிளகாய் வத்தல் யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மோரணபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி திருநாள் மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனையொட்டி திருக்கோயிலில் உள்ள, ஸ்ரீ ராகு, ஸ்ரீ கேது மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதே போல மூலவர் பிரத்யங்கிராதேவிக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் ஆராதனைகளும் மங்கள ஆரத்தியும் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு யாகசாலையில் பூரண ஆஹுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
