ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் மாசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை மற்றும் மிளகாய் வத்தல் யாகம்.!
ஆண்மீகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் மாசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை மற்றும் மிளகாய் வத்தல் யாகம்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரணபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மாசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றது.
முன்னதாக, மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் ஆராதனைகளும் மங்கள ஆரத்தியும் காண்பிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு யாகசாலையில் பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ராகு கேது பரிகார பூஜைகளும் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ