மும்மொழிக் கொள்கையை வரவேற்கிறோம்.! ஆனால் ஹிந்தி. ? உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து.!

கேரளா

மும்மொழிக் கொள்கையை வரவேற்கிறோம்.! ஆனால் ஹிந்தி. ? உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து.!

மும்மொழிக் கொள்கையால் மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் இடையே நிறைய கருத்து மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் இந்தி திணிப்பை எதிர்ப்பதாகவும் கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் ஆர்.பிந்து, "மாணவர்கள் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேரள அரசு விரும்புகிறது. முக்கியமாக வெளிநாட்டு மொழிகளையும் நமது மாணவர்கள் கற்க வேண்டும். எனவேதான் மொழிகளுக்களுக்கான உயர் திறன் மையத்தை கேரளத்தில் நிறுவியுள்ளோம்.

மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்க்கிறோம். அனைத்து மொழிகள் இடையேயும் சகிப்புத்தன்மை நிலவ வேண்டும். பிற மொழிகளை ஏற்றுக்கொள்வது, மொழிகளுடன் இணைந்து செயல்படுவது கேரள கலாசாரத்தின் ஒரு பகுதியாக தொடக்க காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.

பல அயல்மொழிகளையும் கேரளம் ஏற்றுக் கொண்டுள்ளது. இப்போது கேரள மாணவர்களிடையே மலையாளத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் பல்வேறு மொழிகளைக் கற்க ஊக்கமளித்து வருகிறோம்" என்று பேசியிருக்கிறார்.