மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓவின் வசூல் வேட்டை .!
சேலம்

மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓவின் வசூல் வேட்டை .!
ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச ஊழல் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்,சமூக ஆர்வலர்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல ஆண்டுகளாக ஆர்டிஓ பணியிடம் காலியாக இருந்து வந்தது பல்வேறு ஆர்டிஓக்கள் பொறுப்பு வகித்து வந்த நிலையில் அண்மையில் கோவையில் இருந்து புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆர்டிஓ செந்தில் ராம் வந்தவுடனே லஞ்ச வேட்டையை தொடங்கி விட்டாராம் பதிவுக்கு வரும் வாகனங்களுக்கு அதிக அளவு லஞ்சம் கேட்டு வற்புறுத்தி வருவதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
செந்தில் ராம் கோவை வடக்கில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருந்தபோது பல வருடங்களாக பணியாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர் என சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகிறார்கள்.
செந்தில் ராம் வீட்டில் சோதனை செய்தால் கட்டுக்கட்டாக லஞ்சப்பணம் எடுப்பதுடன் அவர் இதுவரை இத்துறையில் அடித்த லஞ்சப் பணமும் சொத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றலாம் என புகார் எழுந்து வருகிறது.
அண்மையில் மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து இலட்சக்கணக்கில் லஞ்ச பணம் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து குறிப்பிடத்தக்கது இதற்கிடையில் லஞ்சம் குறைந்தபாடில்லை அதிகரித்துக் கொண்டுதான் இருப்பதால் தற்போது புதிதாக வந்துள்ள ஆர்டிஓ செந்தில் ராம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.