ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.85.90 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி.!

திண்டுக்கல்

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.85.90 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி.!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.85.90* *இலட்சம் மதிப்பீட்டில்
முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.85.90 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இன்று(06.03.2025) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியதாவது...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

இதில் குறிப்பாக 
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சி, கூலம்பட்டியில் புதிய சமுதாயக்கூடம் பொதுநிதியிலிருந்து ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டிலும், புதிய பொது விநியோகக்கடை கட்டடம் கனிம வள நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலும், பாளையங்கோட்டையில் அங்கன்வாடி மையக் கட்டடம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு பணிகள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், போடிகாமன்வாடி ஊராட்சியில் நாடக மேடை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டிலும், போடிக்காமன்வாடியில் அங்கன்வாடி மையக் கட்டடம் அனைத்துக்கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திலிருந்து ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டிலும், சொக்கலிங்கபுரத்தில் உணவு தானிய கிடங்கு மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதித் திட்டத்திலிருந்து ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஆகமொத்தம் இன்றையதினம் மட்டும் ரூ.85.90 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள்  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
  என பேசினார்..
இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சணாமூர்த்தி,  அருள்கலாவதி, வட்டாட்சியர் முத்துமுருகன், அரசு அலுவலர்கள், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள்,செயல்அலுவலர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்..

செய்தியாளர்

அழகர் சாமி