ஆதிதிராவிடர் காலனியில் சமுதாயக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.!
வேலூர்
ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சி உட்பட்ட அழகர் நாயக்கன்பட்டி மற்றும் புதுப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் சமுதாயக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி அழகர் நாயக்கன் பட்டி மற்றும் புதுப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூபாய் ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பேசியதாவது...
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சி அழகர் நாயக்கன்பட்டி மற்றும் புதுப்பட்டி (ஏடி) காலனியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூபாய் 01/20 கோடி மதிப்பீட்டிலான கிராம அறிவு மையக் கட்டிடம் கட்டும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கொடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மடல் ஆட்சி என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் நிரூபித்து காட்டியுள்ளார். சமத்துவத்தையும், சகோதரத் துவத்தையும்,சோஷிய லிசத்தையும் நிறை வேற்றியுள்ளார். மேலும் ஜாதி மதம் கிடையாது நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள் மாமன் மைத்துனர்கள் எல்லோரும் உறவினர்கள் என்ற மனப்பண்புடன் இன்றைக்கு தமிழகம் உருவாக்கப்பட்டு வருகிறது என கூறினார்.. இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, சித்தையன் கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத் தலைவர் ஜாகிர் உசேன், நகர செயலாளர் சக்திவேல், ஆத்தூர் மேற்கொண்டிய செயலாளர் ராமன், வக்கீல் மறைக்காயர், சௌந்தரபாண்டியன், பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் முகமது ரபிக், முத்து, தியாகு, ஜெயராமன், சுரேஷ், செயல் அலுவலர் ஜெயமாலு, அரசு ஒப்பந்தகாரர் வீராச்சாமி, வார்டு கவுன்சிலர் லாவண்யா -சுரேஷ், தங்கப்பாண்டி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
அழகர் சாமி