இறுதிப் பட்டியல் வெளியிட்டும் ஆறு மாதங்களாக பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்.!

திண்டுக்கல்

இறுதிப் பட்டியல் வெளியிட்டும் ஆறு மாதங்களாக பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்.!

இறுதிப் பட்டியல் வெளியிட்டும் ஆறு மாதங்களாக பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்.!

தமிழகம் முழுவதும் சுமார் 3192 பட்டதாரி ஆசிரியர்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமும் ஜூலை மாதம் தேர்வு செய்துள்ளது.

தேர்வு செய்த பின்பு தற்போது வரை எந்த ஒரு பணியாளையும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் 3192 பேர் நாங்கள் தேர்வாகியுள்ளோம், எங்களுடன் தேர்வு எழுதிய ஆதிதிராவிட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.ஆனால் எங்களுக்கு தற்போது வரை வழங்கப்படவில்லை.

ஆகவே தமிழகம் முழுவதும் இன்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக எங்களுக்கு தமிழக அரசு பணி ஆணை வழங்க வேண்டும் என மனு வழங்கி வருகின்றனர்.

அதே போல் திண்டுக்கல் மாவட்டத்திலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதி பணி ஆணைக்காக காத்திருக்கிறோம் தற்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளோம் தமிழக அரசும் தமிழக முதல்வரும் எங்களது குடும்பத்தின் நலன் கருதி உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அழகர் சாமி