மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் விவசாயி தற்கொலை முயற்சி.! காப்பாற்றிய காவல் துறையினர்.!
திண்டுக்கல்

தனது விவசாய நிலத்தில் விஷ வெள்ளரி கழிவுகள் வருவதால் புகார் மனு வழங்கிய விவசாயி தோட்டத்தில் விவசாயம் செய்யவிடாமல் திமுக பிரமுகர்கள் தடுப்பதாக கூறி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி காவல்துறை தடுத்து நிறுத்தியதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட கம்பிளியம்பட்டி ஊராட்சி காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வமுருகன் இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.
இதே பகுதியில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பதாகவும் அதில் பல்வேறு விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.
இதே ஊரை சேர்ந்த திமுக பிரமுகர் வேலுமணி அவரது மகன் சரவண பிரசாத் ஆகியோர் அருகிலேயே விஷ வெள்ளரி நிறுவனம் நடத்தி வருவதாகவும் இந்த நிறுவனத்தில் இருந்து வரும் கழிவுகள் அனைத்தும் செல்வமுருகன் விவசாய நிலத்திற்குள் பாய்ச்சுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வமுருகன் வேலுமணியிடம் புகார் கூறியுள்ளார். வேலுமணி தகுந்த நடவடிக்கை எடுக்காததால் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். மேலும் தகவல் உரிமை ஆணையத்தில் விஷ வெள்ளரி நிறுவனத்திற்கு அனுமதி வாங்கியுள்ளனரா என கேட்டுள்ளார்.
22 வருடங்களாக அனுமதி இல்லை என்று தகவல் வந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த திமுக பிரமுகர் வேலுமணி மற்றும் அவரது மகன் சரவண பிரசாத் ஆகிய இருவரும் செல்வமுருகன் விவசாய நிலத்திற்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.மேலும் அடியாட்களை கொண்டு தொடர்ந்து தாக்குவதாகவும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் செல்வமுருகன் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
காவல் நிலையத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று செல்வமுருகன் மற்றும் அவரது மனைவி, தாயார், குழந்தைகள் இருந்த நிலையில் திமுக பிரமுகர் வேலுமணி வீட்டிற்கு வந்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறி இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் பெட்ரோல் கேனை புடுங்கி தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
செல்வமுருகன் கூறும் பொழுது எனது பெயரில் உள்ள சொந்த நிலத்திற்குள்ளேயே என்னை உள்ளே விடாமல் திமுக பிரமுகர் தடுத்து என்னை மிரட்டி வருகிறார்.
ஆகவே எனது உயிர் அங்கே போவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிர் போவது மேல் என பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தேன் என்று கூறினார்.
அழகர் சாமி