காந்திகிராமம்- பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து இரத்த தான முகாம்.!
திண்டுக்கல்

காந்திகிராமம்- பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சின்னாளப்பட்டி காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமை காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவை சங்கம் இணைந்தும் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காந்திகிராம கிராமிய நிகழ்நிலைப் பல்கலைக் கழக புவிசார் தகவல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரான முனைவர் முத்துக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் ரத்த தானம் செய்வதால் கொடையாளர் களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி மிகத் தெளிவாகவும் கொடையாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் முனைவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்த இரத்ததான முகாமானது வருடத்திற்கு இருமுறை நடைபெறுவதாகவும் மாணவ மாணவர்கள் மிக ஆர்வத்துடன் இரத்ததானம் செய்து வருவதாகவும் பல்கலைக்கழக முனைவர்கள் சார்பில் கூறப்படுகிறது. இறுதியாக செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப் பாளரான முனைவர் தேவன் நன்றியுரை வழங்கினார்
இந்நிகழ்வில் உடன் முனைவர்கள் பஞ்சநதம், ராதாகிருஷ்ணன், ஷேக் தாவூத், லில்லி மலர், ராஜகுரு, சின்னாளப்பட்டி சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், முருகன், இரத்ததான வங்கி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், நாகமணி, முனைவார்கள் பொன்னுச்சாமி, அருணாச்சலம், செந்தில், பாலமுரளி, கேசவ ராஜன், பக்தவச்சல பெருமாள், தேவகி, மாணவி லாவண்யா மற்றும் 40-க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
செய்தியாளர்
அழகர் சாமி
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )