வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்ததால் பரபரப்பு.
திண்டுக்கல்

ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்ததால் பரபரப்பு.
குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் மணவாளன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு கட்சியினை சேர்ந்தவர்களும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர் அப்போது விசிக கட்சியினை சேர்ந்தவர்கள் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சணாமூர்த்தி பணியிடம் நீக்க செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் மனு கொடுத்தும் தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்காததால் அவர் மீது பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கூறி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .
மேலும் ஆத்தூர் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என்றாலும் அமைச்சர் வழங்க கூடிய நிதிகளுக்கு சரியான முறையில் பணிகள் செய்வதில்லை என குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது..
அழகர் சாமி