பிறப்புறுப்பை கற்களால் தாக்கி வீரர்களா என தகுதி தேர்வு நடத்திய பண்டைய எகிப்தியர்கள்.!

எகிப்து

பிறப்புறுப்பை கற்களால் தாக்கி வீரர்களா என தகுதி தேர்வு நடத்திய பண்டைய எகிப்தியர்கள்.!

நாம் இன்று வாழ்க்கையை அறிவியல், தொழில்நுட்பம், வசதிகள் என நவீன கோணத்தில் எதிர்நோக்கி செல்கிறோம். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய எகிப்தியர்கள், வாழ்க்கையை நாம் நினைப்பதைவிட அனைத்துத் துறைகளிலும் வித்தியாசமாக பாவித்தவர்கள் என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

இவர்கள் எழுதிய வரலாறு மட்டுமல்ல, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளும் இன்றும் உலகமுழுவதும் ஆய்வுகளுக்கு மையமாகவே உள்ளது.

பண்டைய எகிப்தில் ஆண்கள் வீரர்களாகத் தகுதியானவர்களா என்று உறுதி செய்ய, மிகக் கொடூரமான சோதனை முறைகள் இருந்தன. அதில் ஒன்று - ஆண்களின் அந்தரங்க உறுப்பின் முன்தோலை, கத்தி அல்லது கூரிய கருவிகள் இல்லாமல் ஒரு கல்லால் நசுக்கும் முறை. இந்தச் சோதனை நடக்கும் போதுக் 150 ஆண்கள் சுற்றி நின்று ஒருவரின் கைகளை பிடித்துக்கொள்வார்கள். நசுக்கும் அந்த வலியை எவ்வளவு நேரம் ஒருவர் தாங்குகிறார் என்பதைக் கொண்டு அவரின் மன உறுதி, வீரத்தன்மை நிர்ணயிக்கப்பட்டது. இன்றைய மருத்துவக் கோணத்தில் இதைக் கேட்டால், ஒரு மனிதஉரிமை மீறலாகவே தோன்றும்!

தற்போது மருத்துவ முறையில் கருவுறுதலை உறுதிப்படுத்த பல அறிவியல் வழிகள் உள்ளன. ஆனால் பண்டைய எகிப்தியர்கள், மரபு வழியிலேயே சோதனை செய்தனர். பெண்கள் கருவுறும் திறன் உள்ளவர்களா என்பதை அறிய, அவர்களது உடலில் பூண்டு வைக்கப்பட்டு, அதன் வாசனை மூச்சில் தெரிகிறதா என்பதை வைத்து முடிவு செய்தனர். கருவுறும் திறன் உள்ள பெண் என்பதற்கான நிபந்தனையை பூர்த்தி செய்யாதவர்களை திருமணம் செய்ய மறுத்தனர். இது ஒரு வருடம் வரை நீடிக்கும் சோதனை திருமணமாக இருந்தது.

ஒரு எகிப்திய அரசு தலைவர், 108 பெண்களை திருமணம் செய்து, 100க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றிருக்கிறார் என்பதுதான் வரலாற்றுப் பதிவு. இது நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும். மேலும், மனைவிகள் அல்லாத 90க்கும் மேற்பட்ட பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருந்தார். இதுவும் அரசியல் பாசறையில் உரிமை நிலைகளை பாதுகாக்கும் வகையிலான குடும்பக் கட்டமைப்பாக கருதப்பட்டது.