காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.!
தென்காசி

தென்காசியில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகத்தை பழனி நாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்
தென்காசி மே 01
தென்காசியில் டி சி டி யு, ஐ என் டி யு சி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலக தென்காசி மாவட்ட அலுவலக திறப்பு விழா ஹவுசிங் போர்டு காலனி அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொதுச் செயலாளர் செங்கை கண்ணன் தலைமை வகித்தார்.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார் ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் எஸ் பி முரளி ராஜா, முன்னாள் எம்பி ராமசுப்பு, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொடி குறிச்சி முத்தையா, மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், முன்னாள் மாநில துணைத்தலைவர் மோகன் அருணாச்சலம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சிவராமகிருஷ்ணன் முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன் பொதுச் செயலாளர்கள்
ஏஜிஎம். கணேசன், சந்தோஷ், செங்கோட்டை நகர தலைவர் ராமர் வட்டார தலைவர்கள் பெருமாள், கதிரவன், மகேந்திரன் பேச்சாளர் ஆய்க்குடி பெரியசாமி, தாயார் தோப்பு ராமர்,சகோதரி சண்முகசுந்தரி, சித்திக், சேர்மக்கனி கவுன்சிலர் ரபீக்,ராஜீவ் காந்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சலீம், ஆயிரப்பேரி லட்சுமணன்
அமானுல்லா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பொதுச் செயலாளர் கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்