திருமுல்லைவாசலில் சோதனை என்ற பெயரில் தேவையற்ற பதட்டத்தை உண்டாக்கும் NIA வை கண்டித்து ஜவாஹிருல்லாஹ் அறிக்கை.!
திருமுல்லைவாயல்

திருமுல்லைவாசலில் சோதனை என்ற பெயரில் தேவையற்ற பதட்டத்தை உண்டாக்கும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கடும் கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின்
தலைவர் பேராசிரியர் எம் எச்
ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை .!
மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித் என்பவரை தேசிய புலனாய்வு அதிகாரிகள்
கடந்த ஜனவரி 28 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தி அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணையைத் தேசிய
புலனாய்வு அதிகாரிகள் செய்து
வந்திருக்கின்றனர்.
தற்போதைய சூழலில் விசாரணையில் கலந்து கொண்ட நபர்களை மிரட்டிப் பொய்ச் சாட்சி சொல்ல வலியுறுத்தியும் அவர்கள் தயாரித்து வைத்த ஆவணத்தின் படி ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மிரட்டல் விடுப்பதாகத்
தெரிய வருகிறது.
கல்லூரி மாணவர்கள் பள்ளி
மாணவர்கள் மட்டுமல்லாமல்
அவர்களின் பெற்றோர்கள் உறவினர்களையும் விசாரணைக்கு ஆஜராக வற்புறுத்துவதோடு ஊரில் பதட்டமான சூழ்நிலையை என்ஐஏ அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாக சமூக நல்லிணக்கத்தோடு இருக்கும் அந்தப் பகுதி மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் திட்டத்தோடு என்ஐஏ அதிகாரிகள் செயல்படுகிறார்களோ என்கிற அச்சம் மக்களிடையே
இருக்கிறது.
இன்று ஜமாத் நிர்வாகிகளும்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்
கழகத்தின் நிர்வாகிகளும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்திருக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
சமூக அமைதிக்கு முன் உதாரணமாகத் திகழும் தமிழ்நாட்டில் சிறுபான்மையின மக்கள் மீதான தவறான பிம்பத்தை உருவாக்கும் நோக்கில் என்ஐஏ செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது.
தமிழ்நாடு அரசு என்ஐஏ அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள்
கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன் என ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ.அறிக்கை வெளியிட்டுள்ளார்.