ஐபோன் முருகனுக்குத்தான் சொந்தம்! சரி ரைட்டு கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால்? சீமான் கேள்வி

திருச்சி

ஐபோன் முருகனுக்குத்தான் சொந்தம்! சரி ரைட்டு கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால்? சீமான் கேள்வி

திருப்போரூர் கோயில் உண்டியலில் ஐபோன் விழுந்த நிலையில் அதை தர மறுப்பது நியாயமற்றது, கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்கள்? 

என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலகலப்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐபோனை தர மறுப்பது நியாயம் கிடையாது. அதே கோயில் உண்டியலில் வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்கள் என நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் 6 மாதங்கள் கழித்து உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ 52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம் , 620 கிராம் வெள்ளி இருந்தது. இத்துடன் ஒரு செல்போனும் இருந்தது.

இது யாருடையது என கோயில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான் அந்த போன், சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது. இதுகுறித்து தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தினேஷ் திருப்போரூர் கோயிலுக்கு வந்து தனது போனை பெற்றுக் கொள்ளலாம் என தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வந்துள்ளார். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தம் என கூறி போனை தர மறுத்துவிட்டனர்.

அந்த போனின் விலை ரூ 1.50 லட்சம் என்று கேட்டும் செல்போனை திருப்பி கொடுக்க கோயில் நிர்வாகமோ முடியவே முடியாது. வேண்டுமானால் உங்கள் போனில் இருக்கும் தரவுகளை எடுத்துக் கொண்டு போனை கொடுங்கள் என்றனராம். இதையடுத்து அந்த போனில் இருந்த போட்டோக்கள், கான்டாக்ட்கள், முக்கிய மெசேஜ்களை தினேஷ் எடுத்துக் கொண்டதும், போனை மறக்காமல் கோயில் நிர்வாகம் கேட்டு வாங்கிக் கொண்டனராம்.

இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சாத்தியக்கூறுகள் இருந்தால் போனை திருப்பி தரலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் சீமானும் செல்போன் விவகாரத்தில்  விமர்சனம் செய்துள்ளார்.