மது போதையில் அதி வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தடுப்புச் சுவரில் மோதி பலி.!
குற்றம்

மது போதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இருவர் சாலை நடுவே தடுப்பில் மோதி பலி.!
அதிவேக பயணம் நொடியில் மரணம்
சென்னை பள்ளிகரணை, ஆதிபுரிஸ்வரர் கோயில் எதிரே அதிகாலை 4.30 மணியளவில் இருவர் மதுபோதையில் அதிவேகமாக சென்றுள்ளனர்.
அப்போது நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் அதிவேகமாக மோதியதில் ஒருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
தகவலறிந்து வந்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இருவரும் பெருங்குடியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த விஷ்ணு(24), பம்மலை சேர்ந்த கோகுல்(24), இருவரும் பள்ளிகரணை ராஜலட்சுமி நகர் 6 வது தெருவில் அவர்களுடன் பணிபுரியும் அஜேஷ் வீட்டில் கோகுல் கிஷோர் மற்றும் 8 நண்பர்களுடன் சேர்ந்து கெட் டூ கெதர் பார்ட்டி நடத்தியுள்ளனர்.
அதில் மதுபாட்டில்கள் தீர்ந்து போனதால், மது பாட்டிலை கள்ள்ச் சந்தையில் வாங்கி விட்டு மீண்டும் நண்பர் வீட்டிற்கு திரும்பிய போது சென்டர் மீடியனில் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டு, விஷ்ணுவிற்கு நெஞ்சில் பலத்த காயம்பட்டதும், கோகுல் தலை துண்டாகி உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்து தொடர்பாக பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
S S K