ஹோட்டல் அறை எடுத்து பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் மர்மமான முறையில் மரணம். !
Chennai

சென்னை நுங்கம்பாக்கம், குமாரப்பா தெருவை சேர்ந்த 42 வயதாகும் சுரேஷ்பாபு அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த டிசம்பர் 8-ந்தேதி காலை 11 மணிக்கு ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் தியாகராய நகரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். அவர்கள் இருவரும் அங்கு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தங்கைக்கு தொந்தரவு கொடுத்த நபரை தீர்த்துக்கட்டி கடலில் வீசிய கொடூரம்.!
அன்று இரவு 7.30 மணியளவில் லாட்ஜில் இருந்து ஐஸ்வர்யா மட்டும் தனியாக புறப்பட்டு சென்று விட்டார்.
இதனிடையே நேரம் முடிந்துவிட்டதால் கடந்த டிசம்பர் 9 ம்தேதி மதியம் 2.30 மணியளவில் லாட்ஜ் ஊழியர்கள் அறையை காலி செய்ய சொல்வதற்காக சுரேஷ்பாபு தங்கியிருந்த அறை கதவை தட்டியிருக்கிறார்கள்.
வெகுநேரமாகியும் திறக்காததால் விடுதியில் உள்ள மற்றொரு சாவி மூலம் அறையை திறந்து பார்த்தனர்.
அப்போது, சுரேஷ்பாபு அறையில் உள்ள கட்டில் மேல் ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பாண்டிபஜார் போலீசாருக்கு லாட்ஜ் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பாண்டிபஜார் போலீசார் உயிரிழந்த சுரேஷ்பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சுரேஷ்பாபுவுடன் ஓட்டலில் தங்கியிருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் ஐஸ்வர்யா கூறுகையில், குடும்ப வறுமை காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுரேஷ்பாபு வேலை செய்யும் ஓட்டலில் பணி பெண்ணாக வேலைக்கு சேர்ந்தேன்.
சுரேஷ்பாபு என்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார்.
மாலை இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, அதன் பின் இரவு 7.30 மணிக்கு விடுதியில் இருந்து நான் சென்று விட்டேன்' என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது சுரேஷ்பாபு இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )