அரிசன காலனி எனும் பெயரை பள்ளி பலகையிலிருந்து மாற்றிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்

அரிசன காலனி எனும் பெயரை பள்ளி பலகையிலிருந்து மாற்றிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்

நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரம் ஒன்றியத்தில்  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியின் பெயர் பலகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அரிசன் காலனி என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்பகுதி மக்கள் பள்ளியின் பெயர் பலகையில் அரிசன் காலனி என்ற பெயர் தங்களுக்கு வேதனையளிப்பதாகவும், தங்களை தாழ்த்துவதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதனை கேட்ட அமைச்சர் அரசிடம் இந்த விசயத்தை கூறி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மல்லசமுத்திரம் (கிழக்கு) என பெயர் மாற்றி அரசாணையை பிறப்பித்தார்.

மேலும் பள்ளியின் பெயர் பலகையில் உள்ள அரிசன் காலனி எனும் பெயர் நீல நிற மையினால் தானே அழித்து பெயர் மாற்றம் செய்திட உத்தரவிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

இதனால் அப்பகுதி மக்கள் அமைச்சரையும் தமிழ்நாடு அரசையும் பாராட்டினர்.