வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து சிபிஐஎம் சார்பில் ஆர்ப்பாட்டம். !
தேனி

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் வருவாய் கோட்டாட்சியரின் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தை நிறுத்தக் கோரியதால் தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் கை விடப்பட்டது.
மேலும் வருவாய் கோட்டாட்சியர் எதிர்காலத்தில் தங்களுடைய நடவடிக்கை பொதுமக்களிடம் மாற்றவில்லை என்றால் மீண்டும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் , லெனினிஸ்ட் விடுதலைக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்
ஐயனன்