உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், மழை வேண்டியும் 2 டன் மிளகாய் யாகம்- பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த ஶ்ரீ சக்திபுரம் பகுதியில் உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், மழை வேண்டியும் 2 டன் மிளகாய் யாகம் - பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த ஶ்ரீ சக்திபுரம் பகுதியில் உள்ள ஶ்ரீ நடுபழனி சித்தர் பீடம் சார்பில் அருள்மிகு ஶ்ரீ வெட்காளி அம்மன் கோயிலில் உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், மழை வேண்டியும் 2 டன் எடையுள்ள மிளகாய் யாகம் ஶ்ரீ ஶ்ரீசரவண அம்மா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு 2 டன் எடையுள்ள மிளகாயை யாக வேள்வியில் கொட்டி யாகம் நடத்தினார். இதில் கர்நாடக, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
ந.வெங்கடேசன்