தைப்பூசம் திருவிழா - 108 பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

திருப்பத்தூர்

தைப்பூசம் திருவிழா - 108 பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி கிராமத்தில் தைப்பூசம் திருவிழா - 108 பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் பா.முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  தைப்பூசம் திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு 108 பால்குடம் எடுத்து வந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா என கரகோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். 

பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், ரங்கநாதன் ஊர் தர்மகர்த்தா தாமோதரன்,  குட்டி(எ) சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.