திருப்பத்தூர் அருகே நெல் அறுவடை செய்யும் கனரக இயந்திரத்தில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே பலி

திருப்பத்தூர் அருகே நெல் அறுவடை செய்யும் கனரக இயந்திரத்தில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே பலி

திருப்பத்தூர் அருகே நெல் அறுவடை செய்யும் கனரக இயந்திரத்தில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே பலி. ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் சடலத்தை மீட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சி தாதவல்லி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் இவரது மனைவி சசி (42). இவர்களுக்கு மூன்று ஆண் மகன்கள் உள்ள நிலையில்

நடராஜன் மனைவி சசி திருப்பத்தூர் அடுத்த பெரிய வெங்காய பள்ளி பகுதியைச் சேர்ந்த உமாபதி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் அறுவடை செய்வதற்காக சென்று உள்ளார்.

அப்போது தோரணம்பதி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நெல் அறுவடை செய்யும் கணரக இயந்திரத்தில் நெல் பயிர்களை செலுத்திக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக அந்த இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இயந்திரத்தின் ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் உடன் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து பின் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் இயந்திரத்தில் சிக்கி உருக்குலைந்த பெண்ணின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

நெல் அறுவடை செய்வதற்காக சென்ற பெண் இயந்திரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ந.வெங்கடேசன்