அரசு ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை நிறைவேற்றவும்.!

திருப்பத்தூர்

அரசு ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை நிறைவேற்றவும்.!

அரசு ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை நிறைவேற்றவும்.!


தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்  திருப்பத்துார் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.

மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,பொருளாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். 

மாவட்டத் தலைவர் ராசு வரவேற்றார். 

இக்கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் கொண்டு வர வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக  ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும்.

70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்க வேண்டும். ஜாக்டோ ஜியோ நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்டச் செயலாளர் கார்மேகம்,மாநில துணை தலைவர்கள் அரங்கநாதன், சங்கரி, இளமாறன்,துணை செயலாளர்கள் செந்தமிழ்ச்செல்வன் ஆறுமுகம், மகேஸ்வரி, சந்திரசேகரன், மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாநில துணைத் தலைவர் குப்பன் நன்றி கூறினார்.

ந.வெங்கடேசன்