விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோடைக்கால தடுப்பு பற்றி விவசாயிகள் கேள்வி?
திருப்பத்தூர்
ஏலகிரி மலையில் கோடைக்காலம் என்பதால் தீப்பிடித்து எரியும் முன்பு வனத்துறையினர் என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பீர்களா என விவசாயிகள் கேள்வி?
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்திர்க்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு கொடுத்து தேவைகளை குறித்து பேசினார் அப்போது ஒரு விவசாயி கூறுகையில்
குரங்குகள் விவசாய நிலங்களில் பயிரிடுள்ள புளியமரத்தில் உள்ள புளியகாய் மற்றும் பழங்களை மற்றும் விளை பொருட்களை சேதப்படுத்துகின்றது சேதத்துக்கு உண்டான இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
சிறு குறு விவசாயிகளின் மூலதனமாக விளங்க கூடிய தென்னை மரத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்
படிப்பு செலவு காக்கும் திருமண செலவிற்காகவும் குடும்ப செலவிர்க்காகவும் தென்னை மரத்தை நம்பி வாழ்ந்து வரும் ஏழை விவசாயிகளின் கோரிக்கை தென்னை மரத்தில் குருத்து பூச்சி மற்றும் வெள்ளை பூச்சு தாக்கி பல்வேறு மரங்கள் காய்ந்து வருகிறது இன்னியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உட்டுணி தயாரிக்கும் ஆய்வு கூடத்தை திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை முன் வைத்தனர்
அதேபோன்று மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட குமாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் காலம் காலமாக 25 மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பல வருட காலமாக சென்று வந்தபொது வழிகளில் ஆக்கிரமிப்பு செய்து சாலையின் நடுவே புளிய மரம் உள்ளது இதை சாலைவசதிக்கக் புளியமறத்தை அகற்ற கோரி வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் செயல்படும் போது புளிய மரத்திற்கு நீல கலர் துணி அணிவித்து சாமி மரம் என்று இது யாரும் வெட்டக்கூடாது இன்று வலியுறுத்து நாடகம் ஆடி வருவதாக விவசாயி குறை தீர்வு கூட்டத்தில் உடனே ஊராட்சி மன்ற தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை முன் வைத்தனர்
மற்றும் கோடை காலம் என்பதால் ஏலகிரி மலைப்பகுதியில் தீப்பிடித்து எரிந்து வனவிலங்குகள் மற்றும் அரிய வகை மூலிகை மரங்கள் தீக்கிரையாகி வருகின்றது இதைக் குறித்து வனத்துறையினர் என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று விவசாய குறை தீர்வு நாள் கூட்டத்தில் பேசினார் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை குறித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் முன் வைத்து பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறையினர் வேளாண் துறையினர் தீயணைப்புத் துறையினர் காவல்துறையினர் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் துணை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் முன்வைத்து வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
ந.வெங்கடேசன்