தாம்பரம் காவல் நிலையத்தை குளியலறையாக மாற்றிய முதியவர். !
சென்னை

தாம்பரம் காவல் நிலையத்தை குளியலறையாக மாற்றிய முதியவர்.
வெயில் தாக்கத்தால் குளித்ததாக தகவல்.
சென்னை அடுத்த தாம்பரம் எம்.ஆர்.எம் தெருவில் தாம்பரம் காவல் நிலையம் மற்றும் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இரு காவல் நிலைய வளாகத்தினுள் குழாய் ஒன்று உள்ளது. இந்த குழாயின் அடியில் திடீரென ஒரு முதியவர் வந்து அமர்ந்து கண்ணாடியை கழற்றி கீழே வைத்து விட்டு குழாய் அடியில் தலையை வைத்துக் கொண்டு தண்ணீரை திறந்துவிட்டு குளித்தார். பின்னர் தண்ணீரை கைகளால் பிடித்து மேலே ஊற்றிக் கொண்டார்.
அதன் பிறகு எழுந்து நின்று பக்கெட் நிறைய தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டு தாம்பரம் காவல் நிலையத்தை குளியலறையாக மாற்றிக் கொண்டார்.
இதனைகண்ட போலீசார் அவரை அங்கிருந்து விரட்டி விட்டனர்
முதியவர் வெயில் அதிகம் இருப்பதால் தண்ணீரை ஊற்றிக் கொண்டதாக கூறி கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டு காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
செய்தியாளர்
S S K