நீதிக்கட்சியின் வைரத்தூண் ஏ.டி.பன்னீர்செல்வம் மற்றும் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரது மணிமண்டபங்களில் மரியாதை செலுத்திய முதல்வர்.!
திருச்சி

திருச்சி வந்தடைந்ததும், கடந்த ஆண்டு காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த பேரரசர் முத்தரையர் நீதிக்கட்சியின் வைரத்தூண் ஏ.டி.பன்னீர்செல்வம் மற்றும் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரது மணிமண்டபங்களில் மரியாதை செலுத்தி, ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர்.
மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படங்களை / ஓவியங்களை வைத்திடவும், வெளியே உள்ள புதர்களை நீக்கி அங்கே பூச்செடிகளை நட்டு உரிய முறையில் பராமரித்திடவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியும் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.