கோவிலம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணியின் போது இராட்சத கிரேன் பேட்டரி வெடித்து தீப்பரவி வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது.!

சென்னை

கோவிலம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணியின் போது இராட்சத கிரேன் பேட்டரி வெடித்து தீப்பரவி வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. 

சென்னை மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. 

நேற்று இரவு 7 பேர் கொண்ட குழுவினர் 50 டன் கொண்ட இராட்சத கிரேன் மூலம் மெட்ரோ ரயில் பணிக்காக போடப்படும் தடுப்புப் பலகைகளை அகற்றுவதற்காக கிரேனின் பூம் பகுதியை இயக்கி உள்ளனர். 

அப்போது பேட்டரி வெடித்ததாகவும் அதன் காரணமாக தீப்பொறி ஏற்பட்டு அந்த தீ மளமளவென பரவி கிரேன் முழுவதும் எரிய துவங்கியது. 

உடனடியாக ஓட்டுநர் மற்றும்  பணியில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். 

இந்த விபத்தில் கிரேன் முழுவதும் எரிந்து சேதமானது, மேடவாக்கம், மற்றும் தாம்பரத்தில் இருந்து வந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். 

தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல். 

மேடவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

S S K