ஈரோடு கிழக்கில் தி மு க வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அமைச்சர்.!
ஈரோடு
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வி. சி. சந்திரகுமாரை ஆதரித்து தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று கோட்டை பகுதியில் 28 வது வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
இந் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், ஈரோடு மாநகர செயலாளர் மு. சுப்ரமணியம் கோட்டை பகுதி கழக செயலாளர் பொ. ராமச்சந்திரன் உடன் அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் கழக மாநில, மாவட்ட ,மாநகர, பகுதி கழக ,வட்டக் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்
திருவாச்சி மூர்த்தி
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )