டீ போட்டு கொடுத்து அதிமுக ஆட்சிக் காலத்தைப்பற்றி எடுத்துரைத்த பன்னீர் செல்வம்.!
கிருஷ்ணகிரி

தளி தொகுதியில் டீக்கடையில் டீ போட்டு பொதுமக்களிடம் அதிமுக ஆட்சியின் அவசியம் குறித்து பேசிய மாநில அம்மா பேரவை துணை செயலாளர கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பன்னீர்செல்வம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதகொண்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஸ் ஏற்ப்பாட்டில், திண்ணை பிரச்சாரம் நடைப்பெற்றது..
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி, அம்மா பேரவை மாநில துணை செயலாளரும்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துக்கொண்டு அம்மா ஆட்சியை நடத்திய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆட்சிக்காலத்தின் வரலாற்று சாதனைகளை எடுத்துக்கூறி 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதிருந்தே திமுக ஆட்சி அவலங்களை தினமும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென பேசினர்..
பின்னர் வணிகர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கி விளக்கி பேசினர்..
பின்னர் மாவட்ட பொறுப்பாளர் வி.பன்னீர்செல்வம் மதகொண்டப்பள்ளி கிராமத்தில் டீ கடையில் டீ போட்டு அதிமுகவினர், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினார்.
மேலும் மின்சார கட்டணம், வீட்டுவரி உள்ளிட்ட வரிகள் குறையவும், தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மடிக்கணினி, ஆடு,மாடு வழங்கும் திட்டம். திருமண பெண்களுக்கு தாலி தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் மீண்டும் கிடைக்க எடப்பாடி பழனிசாமி ஆட்சி தேவை என எடுத்துரைத்தார்..
அப்போது அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்
மேலும் நிகழ்ச்சியில் தளி ஒன்றிய கழக செயலாளர் கணேஷ், ஓசூர் முன்னாள் நகர செயலாளர் ஓசூர் மாமன்ற உறுப்பினருமான நாராயணன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் சசிகுமார், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சுதாகர் ரெட்டி, மற்றும் தளி ஒன்றிய கழக நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்,.
செய்தயாளர்
மாருதி மனோ