மனிதநேய மக்கள் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்.!

விருதுநகர்

மனிதநேய மக்கள் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்.!

மனிதநேய மக்கள் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்டத் தலைவர் T . மதார் கான் அவர்களது தலைமையில் அருப்புக்கோட்டையில்  26. 4. 2025 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு மமக மாவட்ட செயலாளர் சிக்கந்தர் பாட்சா தமுமுக மாவட்ட செயலாளர் சல்மான் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் கரீம் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானம் 1
அருப்புக்கோட்டையில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் பேருந்து நிலையத்திற்கு தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவரும்  சுதந்திரப் போராட்டத் தியாகியுமான *கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்* அவர்களின் பெயரை சூட்ட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 2
ஆவுடையாபுரம் ஜமாத்தார்களால் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவிற்கு கோபுர மின்விளக்கு அமைத்து தரவேண்டும் என  நமது விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் பா மாணிக்கம் தாகூர் அவர்களை  வலியுறுத்துவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

தீர்மானம் 3
வீரசோழன் ஊராட்சியில் இயங்கிக் கொண்டிருக்க கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வீரசோழன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்களின் நலன் கருதி இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் நியமனம் செய்து சிகிச்சை அளிக்க ஆயத்தம் செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம் 4
வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மதுரையில் நடைபெற இருக்கின்ற தென் மண்டல மாநாட்டிற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி மக்களையும் அழைத்துச் செல்வது எனவும் சிறப்பான முறையில் விளம்பரங்கள் செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பூலாங்கால் அஜ்மல் கான் அப்துல் வஹாப் ஜமால் முகமது மற்றும் அருப்புக்கோட்டையின் நகர நிர்வாகிகள் நகரத் தலைவர் ஷேக் அப்துல்லாஹ் நகரச் செயலாளர்கள் செய்யது அலி முகமது யூசுப் நகரத் துணைச் செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

     அன்சாரி