தஞ்சை டி ஆர் ஓ விற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி கே பாண்டியன் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி.!
தென்காசி

கோவிந்தப்பேரி ஊராட்சியில் தஞ்சை டி ஆர் ஓ விற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி கே பாண்டியன் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி
தென்காசி ஏப்ரல் 27
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்த் பேரி ஊராட்சியைச் சேர்ந்த தியாகராஜன் குரூப்1 தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்று தற்போது தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருகின்றார்.
கோவிந்தப் பேரி ஊராட்சியில் உள்ள ஞானம் மறவா நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8 வரை தமிழ் வழி கல்வி பயின்றார் அங்கு படித்து சிறந்த மாணவனாக தேர்ச்சி பெற்று தற்போது மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார்.ஞானம் மறவா நடுநிலைப் பள்ளியின் விழாவுக்கு வருகை புரிந்த தியாகராஜனுக்கு கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் டி கே பாண்டியன் தலைமையில் கோவிந்தப்பேரி ஊராட்சியில் வைத்து பாராட்டும் நினைவு பரிசுகளும் வழங்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம் துணைத் தலைவர்
இசேந்திரன் ஓய்வு பெற்ற வனத்துறை மாணிக்கம் ராமசாமி பாண்டியன் முருகன் மாரிதுரை விவசாய சங்க தலைவர் சிங்கக்குட்டி மற்றும் பலர்பாராட்டி வாழ்த்து
தெரிவித்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்