உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு.!
தென்காசி

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் "என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் “ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே..கமல்கிஷோர், தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்திற்குட்பட்ட கடையத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் 2024-2025 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் 30,000 லிட்டர் கொள்ளளவுடன் ரூ.18.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நீர்த்தேக்க தொட்டியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 265 வீடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், வருகைப் பதிவேட்டினையும், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வினையும் மேற்கொண்டார்.
பொது நூலக கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்புகள் மற்றும் வருகைப் பதிவேடுகள் குறித்தும்,பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
வட்டாரக் கல்வி அலுலவகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளியினை பார்வையிட்டு அடிப்படை வசதி மற்றும் மாணவ, மாணவியர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வு மேற் கொண்டும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், காவல் நிலையத்தில் கோப்புகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்
AGM கணேசன்