பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா.!

தென்காசி

பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா.!

சீவநல்லூரில் பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

தென்காசி மே 23

தென்காசி மாவட்டம் சீவநல்லூர், பீட்டர் அல்போன்ஸ் வணிக வளாகம் அருகில் தென்காசி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சீவநல்லூர் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவி கார்த்திகாவிற்கும், சீவநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி கல்வி பயின்ற பத்தாம் வகுப்பு மாணவி காயத்திரி பள்ளியில் முதலிடம் பெற்றமைக்கும் பாராட்டு விழா சீவநல்லூர் பொது மக்கள் சார்பில் மிக சிறப்பாக நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சீவநல்லூர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சட்டநாதன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அருணாசலம், ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலர் இசக்கியா பிள்ளை, ஒப்பந்ததாரர் அருணாசலம், கதிரவன், வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், சீவநல்லூர் சாமித்துரை வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக லெக்ஸோ டிரஸ்ட்டின் நிர்வாக இயக்குனர் கல்வியாளர் கே எஸ் ராமையா, பாரதி செம்மல் விருது பெற்ற பாரதி முத்துநாயகம், சமூக ஆர்வலர் ஆறுமுகச்சாமி, ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை கருப்பையா, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திவான் பக்கீர் ஆகியோர் மாணவிகளை வெகுமாக பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கணினி ஆசிரியர் கணேசன், பெரிய மாரியப்பன், கண்ணன், பரமசிவன், சுப்பிரமணியன், மற்றும் ஊர் பொதுமக்கள், பெரியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சால்வை அணிவித்து  பாராட்டினர்.

முடிவில் தீயணைப்பு அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கே.பி. சிவனப்பா, பணி ஓய்வு பெற்ற நடத்துனர் மாடசாமி, தீயணைப்பு அலுவலர் மாரியப்பன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

மாவட்ட செய்தியாளர் 

        AGM கணேசன்