அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர் அறிஞர் அண்ணா .!

வரலாறு

அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர் அறிஞர் அண்ணா .!

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒன்றுபட்ட தமிழ்நாடு என்று இருந்ததில்லை

பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என்றுதான் இருந்தது. வரலாற்று ரீதியாக நியாயப்படுத்த முடியாதபோது, எதற்காக புதிதாக தமிழ்நாடு என்ற பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?"  என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் T.S.பட்டாபிராமன் கேள்வி எழுப்பினார்.
                                                                                  அதற்கு பேரறிஞர் அண்ணா. பதில் கூறுகையில்                                  

இந்த மன்றத்துக்கும், இந்த உறுப்பினருக்கும் தெளிவுபடுத்த தமிழ்நாடு என்ற சொற்கள் இருக்கும் சில நூல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பரிபாடல், பதிற்றுபத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை இவை எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ்க் காப்பியங்கள். பரிபாடலில் வருகிற 'தண்டமிழ் வெளி தமிழ்நாட்டு அகமெல்லாம்' என்ற வாக்கியத்துக்கு, மூன்று பகுதிகளும் இனிமையான தமிழ் சூழ்ந்த தமிழ்நாடு என்று பொருள்.

1800 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதிற்று பத்தில் 'இமிழ்கடல் வெளி தமிழகம்' என்று எழுதப்பட்டு இருக்கிறது.

அதாவது கடலை  எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு.

சிலப்பதிகாரத்தில், 'தென்தமிழ் நந்நாடு' என கூறப்பட்டிருக்கிறது.இதன் பொருள் நல்ல தமிழ்நாடு.

மணிமேகலையில், 'சம்புதீவினில் தமிழக மருங்கில்' என வருகிறது. தமிழ்நாடு சம்புத்தீவு என அழைக்கப்படுகிறது என்பதே இதன் பொருள்.

இதற்கு பின்னரே சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற மூன்று ராஜ்ஜியங்கள் வந்தன.

தமிழ்க் காப்பியங்களில் தமிழ்நாடு என்று இருக்கிறது. இந்த காப்பியங்களில் கருத்து வளத்துக்கு ஒன்றும் பஞ்சமில்லை.இது மதிப்பிற்குரிய நண்பர் நினைவையும் நேரத்தையும் தமிழ் காப்பியங்களுக்காகச் செலவிடவில்லை என்பதையே காட்டுகிறதுஎன்று பதிலுரைத்தார் அறிஞர் அண்ணா.