மாற்றுத்திறனாளி பள்ளியில் பொங்கல் விழா.!
கடலூர்

மாற்றுத்திறனாளி பள்ளியில் பொங்கல் விழா
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ குறவன் குப்பத்தில் உள்ள நியூ லைட் சாரிட்டபுல் டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா டிவைன் கிராஸ் மிஷன் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் நியூலைட் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்கள் இல்லத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இதில் பள்ளி தலைமையாசிரியர் சகாய பாக்கியம் அனைவரையும் வரவேற்றார் ஜே.பி.ஏ மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர்திருமதி உமாஐயர் முன்னிலை வகித்தார் மனநல நிபுணர் சகாய ராஜா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவின் டிவைன் யூ சபையின் தலைவி அருட்திரு ரோஸ்மேரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற பயிற்சி மற்றும் கடின உழைப்பு அவசியம் எனக் கூறி மேலும் ஆசிரியர் கூறும் பயிற்சிகள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்
பெஙகல் விளையாட்டு போட்டிகள் நடபெற்றது.டிரஸ்டி ராஜாமணி புத்தாடைகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உமாஐயர் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிறப்பாசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் விடுதி காப்பாளர் கென்னடி நன்றி கூறினார் விழா ஏற்பாடுகளை தசை பயிற்சி யார் சசிகுமார் செய்தார்.விழா இனிதே நிறைவுற்றது.