வியட்நாம் நாட்டில் உள்ள உலகின் மிகப் பெரிய குகை .!

உலகின் மிகப் பெரிய குகை

வியட்நாம் நாட்டில் உள்ள உலகின் மிகப் பெரிய குகை .!

உலகின் மிகப்பெரிய இயற்கைக் குகை 

1991 ஆம் ஆண்டில் ஒரு நாள் வியட்நாமில் 
பலத்த மழை பெய்தது. விவசாயி ஹோ கான் என்பவர் மழைக்கு ஒதுங்க ஒரு இடம் தேடினார். அவருக்கு கிடைத்த இடம்தான் 
'ஹான் சன் டூங், அதாவது "மலை நதி குகை" என்ற பொருள்படும், இது வரை கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய குகையாகும். 

இந்த சம்பவம் நடந்து பல வருடங்களின் பிறகு, 2006 ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக் குழு அவரை அழைத்துக் கொண்டு குறித்த இடத்தை மீண்டும் தேடிச் சென்றனர். ஆனால் அந்த விவசாயி சரியான இடத்தை காட்ட மறந்துவிட்டார். 

பின்னர் 2009 ஆம் ஆண்டு அதே விவசாயி அதன் அமைவிடத்தை கண்டுபிடித்து அரச அதிகாரிகளிடம் அறிவித்தார். அதன் பிறகு 
இந்தக் குகை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக மாறியது.

இந்த குகையின் நீளம் சுமார் 5 கிலோமீட்டர் வரையும் அதன் உயரம் 243.84 மீட்டர் வரையும் ஆகும். அதிலே சுமார் 68 போயிங் 777 ரக விமானங்களை உள்ளே வைக்கும் அளவுக்கு இடப்பரப்புள்ளது. 40 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்ட முடியுமான பரப்பை கொண்டது. உள்ளே ஊற்றுக்கள், நதிகள் மற்றும் மரங்களும் இருப்பாதல் தனியான உலகம் போல் காட்சியளிக்கும். எழில் மிகுந்த காட்சி கொண்ட இக்குகையை ஆய்வாளர்கள் "ஏதேன் தோட்டம்" என்று அழைக்கின்றனர்.