கல் குவாரிக்கு எதிராக போராடிய நபர் லாரி ஏற்றிக் கொலை.! அதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து இந்த கொலை.!
புதுக்கோட்டை
கொலை செய்யப்படுவதற்கு முன் ஜகபர் அலி பேசிய காணொளி Video .!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரில் இருசக்கர வாகனம் மீது 407 மினி லாரி மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரும் சட்டவிரோத கல் குவாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய நபரான ஜகபர் அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விவகாரத்தில் ஏற்கனவே உயிரிழந்தவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் குவாரி உரிமையாளர்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறையினர்.
இந்த வழக்கில் ஒருவரை கூடுதலாக சேர்த்து மொத்தம் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கொலை வழக்காக மாற்றி ஐந்து பேரில் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ள நிலையில் மற்றொரு குவாரி உரிமையாளரை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது