தென்காசியில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பொதுக்கூட்டம்.!
தென்காசி

தென்காசியில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பொதுக்கூட்டம்
தென்காசி ஏப்ரல் 15
தென்காசியில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு உலமா சபை மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், உலமா சபை வட்டார நிர்வாகிகள் காதர் ஒலி, முஸ்தபா அகமது மீரான் அபூபக்கர் அப்துல் ரஹீம் அப்துல் கனி பக்ருதீன் முஸ்லிம் லீக் நகர தலைவர் அபூபக்கர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நயினார் முஹம்மது எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் திவான் ஒலி விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணை செயலாளர் சித்திக் முஸ்லிம் லீக் விவசாய அணி மாநில செயலாளர் முகமது அலி கடையநல்லூர் ஜமாத் கமிட்டி தலைவர் சையது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலமா சபை தென்காசி வட்டார செயலாளர் சம்சுதீன் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர் அரசு ஹாஜி முகைதீன் ஹஸ்ரத் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். கடையநல்லூர் பேட்டை பள்ளிவாசல் தலைமை இமாம் சாகுல் ஹமீது தென்காசி இமாம் அப்துல் ஜப்பார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் இந்த தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராணி எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் பழனி நாடார், ராஜா தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தென்காசி மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில் தென்காசி சேர்மன் சாதிர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அப்துல் மஜீத் கண்டன உரை ஆற்றினார். முடிவில் உலமா சபை பொருளாளர் முகமது ரஃபீக் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்