தென்காசியில் அதிமுக மாணவர் அணி சார்பில் நீட் தேர்வால் உயிர் நீத்த மாணவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி.!
தென்காசி

தென்காசியில் அதிமுக மாணவர் அணி சார்பில் நீட் தேர்வால் உயிர் நீத்த மாணவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி
தென்காசி ஏப்ரல் 21
தென்காசியில் அதிமுக தெற்கு, வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் நீட் தேர்வால் உயிர் நீத்த 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமுரளி என்ற குட்டி யப்பா எம்எல்ஏ, செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, கந்தசாமி பாண்டியன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சில ஆனந்த், மாவட்ட அவைத்தலைவர்கள் சண்முகசுந்தரம், மூர்த்தி, இணை செயலாளர் சண்முகம் பிரியா துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் பொருளாளர்கள் சாமிநாத பாண்டியன் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர செயலாளர் சுடலை வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நீட் தேர்வால் உயிர் நீத்த 22 மாணவ மாணவிகளுக்கு அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் காளிராஜ் முருகையா கசமுத்து கிட்டு ராஜா முருகையா பாண்டியன் வழக்கறிஞர் கார்த்திக் குமார் சுப்பிரமணியன் லட்சுமண நெல்லை முகிலன் சிவ சீதாராம் சங்கர சுப்பிரமணியன்
மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் வேம்பு என்ற ரவி துரைப் பாண்டியன் ஜெயக்குமார் டாக்டர் சுசிகரன் ராமச்சந்திரன் சங்கர பாண்டியன் அமல்ராஜ் இருளப்பன் குணம் நகர செயலாளர்கள் முருகன் கணேசன் ஆறுமுகம் சங்கர பாண்டியன் பேரூர் செயலாளர்கள் காத்தவராயன் முத்துராஜ் கணேஷ் தாமோதரன் ஜெயராமன் சுப்பிரமணியன் மாடசாமி கார்த்திக் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்காசி தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பிரேம்குமார் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்